search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக விரோதி"

    • சுமார் 5 ஆண்டுகளாக மாணவிகளின் விடுதி பூட்டி கிடக்கிறது.
    • கஞ்சா அடிப்பவர்கள் போதை தலைக்கு ஏறியதும் இந்த விடுதியில் தான் படுத்து தூங்கிறார்கள்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதன் அருகில் மாணவியர் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த மாணவியர் விடுதி 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    அரசு மேல்நிலைப்பள்ளி யில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவிகள் தங்கி படிப்ப தற்காக 2 மாடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு சில காலம் மட்டும் மாணவிகள் தங்கி படித்தார்கள். அதன்பிறகு பள்ளியில் வெளியூர்களில் இருந்து படிக்க வரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்ததால், விடுதியில் மாணவிகள் யாரும் தங்கு வது இல்லை. தற்போது பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் மட்டும் தான் படித்து வருகிறார்கள். இதனால் சுமார் 5 ஆண்டுகளாக மாணவிகளின் விடுதி பூட்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் மாணவிகளின் விடுதி கேட் உடைக்கப்பட்டு திறந்தே இருக்கிறது. இரவு நேரங்களில் இந்த விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. விடுதியின் உள் பகுதியில் உள்ள கதவு ஜன்னல்கள், அலமாரிகள் உடைக்கப் பட்டு திருடப்பட்டு இருக்கி றது. கேட் எப்போதும் திறந்து இருப்பதால் மது பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கும், சூதாட்டம் நடத்துவதற்கும் இந்த விடுதியை பயன்ப டுத்துகிறார்கள்.

    மேலும் கஞ்சா அடிப்பவர்கள் போதை தலைக்கு ஏறியதும் இந்த விடுதியில் தான் படுத்து தூங்கிறார்கள். இந்த விடுதியில் வைத்து பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறும் முன் அரசு தக்க நடவடிக்கை எடுத்து விடுதியை பாதுகாக்க வேண்டும்.

    பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் இந்த விடுதி சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. ஆனால் இன்று பாழடைந்து மது பிரியர்களின் கூடாரமாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த கட்டிடத்தை சீரமைத்து அரசின் வேறு அலுவலங்க ளுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×